இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிகில், தனுஷ் ராசி நேயர்களை படங்களில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான், நேற்று தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். அங்கு இன்ப அதிர்ச்சியாக அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோய் மோன் பங்கேற்று, அவரிடம் காதலை வெளிப்படுத்தினார். இதை ரெபா ஏற்றதோடு, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது.
''லாக்டவுனால் 6 மாதங்களாக ரெபாவை சந்திக்கவில்லை, அவரை பார்த்ததும் காதல் சொல்ல தோன்றியது'' என ஜோய் மோன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். இப்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
ரெபா மோனிகா ஜான் தற்போது விஷ்ணு விஷால் உடன் எப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப்சீரிஸிலும் நடிக்கிறார்.