பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமா விநியோக துறையில் இருந்த ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் படத்தை அறிமுக இருக்குனர் விஷால் வெங்கட் இயக்குகிறார். இவர் இயக்குனர் மதுமிதாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரியா, ரித்விகா, அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, அபி ஹாசன், மணிகண்டன், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா, நாசர், அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விஷால் வெங்கட் கூறியதாவது: இந்த படம் வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு கதாபாத்திரங்களின் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையாக உருவாக்கபட்டு இருக்கிறது. இரண்டு நாட்களில் நடக்கும் இந்த கதை, மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை பற்றி பேசும் என்கிறார்.