பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அஜித்தின் உதவும் குணம் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் செய்யும் உதவிகள் வெளி உலகத்துக்கு வருவதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. இந்த நிலையில் அவர் வாரணாசியில் சந்தித்த ஒரு இட்லி கடை சிறுவனின் படிப்பு செலவை ஏற்றிருக்கும் தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது.
ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் இருந்த அஜித், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிக்கிமிற்கு பைக் பயணம் மேற்கொண்ட செய்தி பரவலாக வெளியானது. இந்த பயணத்துக்கு இடையில் நடந்த ஒரு சம்பவம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்த பைக் பயணத்தில் அவர் வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு தமிழர் நடத்தும் இட்லி கடையை தேடிப்பிடித்து சாப்பிடச் சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையில் ஒரு சிறுவன் வேலை செய்திருக்கிறான். அந்த சிறுவன் அஜித்தை அடையாளம் கண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறான். இதனால் அவனுடன் அஜித் பேசி இருக்கிறார். அப்போது அந்த சிறுவன் இது என் அப்பா நடத்தும் கடை தான். கொரோனா காலத்தில் 6 மாதம் கடை பூட்டி இருந்ததால் மிகவும் வறுமை நிலைக்கு வந்து விட்டோம். பீஸ் கட்ட முடியாமல் எனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன். என்று கூறியிருக்கிறான்.
இதைக் கேட்ட அஜித் அவன் படிப்பு செலவை தான் ஏற்பதாக இட்லி கடைக்காரரிடம் கூறிவிட்டு சென்றதோடு. அந்த பகுதி லொக்கேஷன் மானேஜரை தொடர்பு கொண்டு அந்த சிறுவன் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.