உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் | கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி | ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் |
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன-13ஆம் தேதி வெளியானது. ஆனால் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே மாஸ்டர் படத்தின் பல காட்சிகள் துண்டு துண்டாக இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியாவிலும் பரவின. இது மாஸ்டர் படக்குழுவினரையும் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் செயல்பட்டது தெரியவந்தது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்குப் ஒரு குறிப்பிட்ட டிஜிட்டல் நிறுவனம் படத்தை மூலமாகவே அனுப்ப முடியும். அந்த சமயத்தில் தான் மாஸ்டர் படம் மொபைலில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது உறுதியானது. இதை தொடர்ந்து, அந்த தனியார் நிறுவனம் மற்றும் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் சட்டவிரோதமாக 'மாஸ்டர்' காட்சிகளைப் பதிவேற்றியதற்காக ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்..