தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
உலக திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. 2025ல் வெளியாகும் படங்களுக்கான 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அரசியல் பிரமுர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “இந்தியத் திரைப்படத் துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்கள், மதிப்பு மிக்க அகாடமி விருதுகள் 2025 குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆறு தசாப்தங்களாக ஒரு அற்புதமான நடிப்புத் தொழிலைக் கொண்ட கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட மேலானவர். ஒரு நடிகராக, கதை சொல்பவராக மற்றும் இயக்குனராக அவரது புத்திசாலித்தனம், அவரது பல்துறை திறமை மற்றும் பல தசாப்த கால அனுபவத்துடன் இந்திய மற்றும் உலகளாவிய சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது விதிவிலக்கான ஆளுமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவர் கலைத் துறையின் மாஸ்டர்.
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர் உலக சினிமாவிற்கு இன்னும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் சேவையை வழங்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.