ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
உலக திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. 2025ல் வெளியாகும் படங்களுக்கான 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அரசியல் பிரமுர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “இந்தியத் திரைப்படத் துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்கள், மதிப்பு மிக்க அகாடமி விருதுகள் 2025 குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆறு தசாப்தங்களாக ஒரு அற்புதமான நடிப்புத் தொழிலைக் கொண்ட கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட மேலானவர். ஒரு நடிகராக, கதை சொல்பவராக மற்றும் இயக்குனராக அவரது புத்திசாலித்தனம், அவரது பல்துறை திறமை மற்றும் பல தசாப்த கால அனுபவத்துடன் இந்திய மற்றும் உலகளாவிய சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது விதிவிலக்கான ஆளுமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவர் கலைத் துறையின் மாஸ்டர்.
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர் உலக சினிமாவிற்கு இன்னும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் சேவையை வழங்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.