ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அவரது மனைவியாக ஐஸ்வர்யாராய், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, குந்தவையாக த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடந்தது. பின்னர் புதுச்சேரியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வனில் நடிப்பதற்காக கொரோனா காலத்தில் த்ரிஷா வாள் சண்டை பயிற்சியும், குதிரையேற்ற பயிற்சியும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.