பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கொரோனா பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப் போன பல முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றன. வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீசாகின்றன.
வழக்கமாக இது போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் போதும், தியேட்டர்களில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுவதுண்டு. தற்போது 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், இம்முறையும் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அரவிந்த்சாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.