இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கொரோனா பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப் போன பல முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றன. வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீசாகின்றன.
வழக்கமாக இது போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் போதும், தியேட்டர்களில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுவதுண்டு. தற்போது 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், இம்முறையும் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அரவிந்த்சாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.