விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? |
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. தமிழில் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா தெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் வீடு வாங்கி அங்கேயே தங்கி நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு செல்வதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் அளித்த காரில் சென்று வந்தவர், தற்போது சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ரேன்ச் ரோவர் காரை வாங்கியுள்ள ராஷ்மிகா அதன் முன் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எனக்குள்ளே வைத்துக் கொள்வேன். ஆனால், இந்த முறை இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் பயணத்தில் நீங்களும் ஒரு பங்கு, அதை உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்பினேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.