கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை |
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் 34 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னையில் இன்று காலை அந்த படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், நடிகை அம்பிகா உள்ளிட்டோருடன் படம் பார்த்தபின், விஜயகாந்த் இளைய மகனும், நடிகருமான சண்முகபாண்டியன் அளித்த பேட்டி...
கேப்டன் பிரபாகரன் உருவானபோது நான் பிறக்கவில்லை. இந்த படத்தை டிவியில தான் பார்த்து இருக்கிறேன். இப்பதான் திரையில் பார்த்தேன். நிறைய இடங்களில் அப்பாவை பார்த்து அழுதுவிட்டேன். அவரை அவ்வளவு அழகாக காண்பித்து இருந்தார்கள். அவரின் டயலாக்கும் சூப்பராக இருந்தது. குறிப்பாக, அந்த ஓபனிங் சண்டைக் காட்சியை என்ஜாய் பண்ணி பார்த்தோம். பாடல்களும் நன்றாக இருந்தது.
இந்த படத்தை 1990ல் எடுத்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. படம் எங்கும் போராடிக்கவில்லை, இந்த மாதிரி படங்களை இப்ப உள்ள இயக்குனர்கள் எடுக்க வேண்டும். என்னை வைத்து கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 எடுப்பதாக இயக்குனர் செல்வமணி சொல்லியிருக்கிறார். நான் அவருக்கு கால்ஷீட் கொடுக்க ரெடி.
நேற்று மதுரை மாநாட்டில் அப்பாவை அண்ணன் என அழைத்து இருக்கிறார் விஜய். அவரை அண்ணனாக பார்க்கிறார் விஜய். சின்ன வயதில் இருந்தே அப்பாவை அவருக்கு தெரியும் என்பதால் அண்ணன் என்கிறார்'' என்று பேசினார்.
அப்போது தேமுதிக தொண்டர்களை விஜய் இழுக்கிறாரா என்ற கேள்விக்கு 'அப்பா மக்கள் சொத்து. அவர் இந்த படத்தில் கூட மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என டயலாக் பேசியிருப்பார். யார் யாரை இழுக்கிறார் என்பதை மக்கள் சொல்வார்கள். இப்ப கேப்டன் பிரபாகரனை பற்றி பேசுவோம். இந்த படம் மாதிரி அவரின் பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆக வேண்டும்' என்றார்.