துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அஜீத் நடிக்கும் வலிமை படம் தொடங்கி ஒரு ஆண்டுக்குமேல் ஆகிவிட்டது. கொரோனா பிரச்சினை, படப்பிடிப்பில் அஜீத்துக்கு ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இதன் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே சென்றது. படத்தின் அப்டேட் கேட்டு அஜீத் ரசிகர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அளவிற்கு படத்தை பற்றிய எந்த தகவல்களும் வெளிவராமல் மந்தமாக இருந்தது.
படத்தின் 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு 60 சதவிகிதம் முடிந்திருந்தது. கொரோனாவுக்கு பிறகு 20 சதவிகிதம் படமானது. இன்னும் 20 சதவிகித படப்பிடிப்பு என்பது கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள்தானாம். கதைப்படி வில்லன் வெளிநாட்டுக்கு தப்பிக்க அங்கு சென்று அவனை அஜீத் பிடிக்கிற மாதிரியான கதை என்பதால் சுவிட்சர்லாந்து நாட்டில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து அதற்கான திட்டமும், அனுமதியும் தயாராக இருந்ததாம்.
ஆனால் கொரோனா வைரசின் இரண்டாவது பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கடும் கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது. இதனால் வலிமை படத்துக்கு வழங்கிய அனுமதியை அந்த நாடு ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இனிமேலும் காத்திருக்க முடியாது என்பதால் வில்லன் ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்வது போன்று கதையை மாற்றி கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ராஜஸ்தானில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.