கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
அஜீத் நடிக்கும் வலிமை படம் தொடங்கி ஒரு ஆண்டுக்குமேல் ஆகிவிட்டது. கொரோனா பிரச்சினை, படப்பிடிப்பில் அஜீத்துக்கு ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இதன் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே சென்றது. படத்தின் அப்டேட் கேட்டு அஜீத் ரசிகர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அளவிற்கு படத்தை பற்றிய எந்த தகவல்களும் வெளிவராமல் மந்தமாக இருந்தது.
படத்தின் 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு 60 சதவிகிதம் முடிந்திருந்தது. கொரோனாவுக்கு பிறகு 20 சதவிகிதம் படமானது. இன்னும் 20 சதவிகித படப்பிடிப்பு என்பது கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள்தானாம். கதைப்படி வில்லன் வெளிநாட்டுக்கு தப்பிக்க அங்கு சென்று அவனை அஜீத் பிடிக்கிற மாதிரியான கதை என்பதால் சுவிட்சர்லாந்து நாட்டில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து அதற்கான திட்டமும், அனுமதியும் தயாராக இருந்ததாம்.
ஆனால் கொரோனா வைரசின் இரண்டாவது பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கடும் கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது. இதனால் வலிமை படத்துக்கு வழங்கிய அனுமதியை அந்த நாடு ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இனிமேலும் காத்திருக்க முடியாது என்பதால் வில்லன் ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்வது போன்று கதையை மாற்றி கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ராஜஸ்தானில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.