படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
முன்னணி தெலுங்கு இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் வானம் படத்தை இயக்கியவர், தெலுங்கில் வேதம், காஞ்சி, கப்பர்ஸ் பேக், காம்யம் உள்பட பல படங்களை இயக்கியவர். கடைசியாக கங்கனா ரணவத் நடித்த மணிகர்னிகாக படத்தை இயக்கி அதிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் என்.டி.ராமராவின் வரலாற்றை இரண்டு பாகமாக இயக்கினார். தற்போது தலைப்பு வைக்கப்பட்டாத இரண்டு படங்களை இயக்கி வருகிறார். ஒன்றில் ரவிதேஜாவும், மற்றொன்றில் பவன் கல்யாணும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் கிரிஷிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிரிஷ் இயக்கும் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் கிரிஷிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனால் படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.