ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

சக்தி பீடம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் "புத்தம் புது நேரம்". கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரத்வாஜ், சதீஷ் குமார் நாயகர்களாக நடிக்கிறார்கள், சுபஸ்ரீ, ரசியா நாயகியாக நடிக்கிறார்கள்.
படத்தின் அறிமுக விழாவில் நாயகி சுபஸ்ரீ பேசும்போது "விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கிறது. எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்பாதர். எனக்கு மட்டுமல்ல எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளுக்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்தான் காட்பாதர்" என்றார்.
இன்னொரு நாயகியான ரசியா பேசும்போது, " நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். எங்கள் பகுதியில் இருந்து தமிழுக்கு வரும் முதல் நடிகை தான்தான் என்று நினைக்கிறேன். பள்ளி காலத்தில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. இதற்காக நடனம், நடிப்பு கற்று இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.