ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவரை பற்றி திரையுலகினர் கூறுகையில் 175க்கும் அதிகமான படங்களை தயாரித்தவர் ஏவிஎம் நிறுவனத்தை சேர்ந்தவர் சரவணன். இந்தியளவில் 100 படங்களை தயாரித்தவர்கள் மிகக்குறைவு. இப்படிப்பட்ட பெருமை கொண்ட பாரம்பரிய நிறுவனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் பணிவும், அவரின் எளிமையும் திரைத்துறையில் அவ்வளவு பிரபலம்.
அனைவரையும் மரியாதையாக அழைப்பார், மரியாதையாக நடத்துவார். குறிப்பாக, தனது கைகளை கட்டிக்கொண்டு பேசுவது அவர் ஸ்டைல். சில சமயம் விருந்தினர்களை உட்கார வைத்து அவர் எழுந்து நின்று பேசுவார். எப்போதும் வெள்ளை நிற உடைகளை அணிவார். சினிமா நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு சிம்பிளாக வந்து செல்வார். முன்னணி நடிகர்கள், நடிகைகளை வைத்து படம் தயாரித்து இருந்தாலும், தங்கள் பட செய்திகள் வந்தால், தன்னை பற்றி செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், போட்டோகிராபர்களுக்கு நன்றி கடிதம் எழுதி அனுப்புவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.
சினிமா மேடைகளில் மிக சுருக்கமாக தெளிவாக பேசுவார். இதுவரை யாரையும் தவறாக பேசியது இல்லை. எந்த மீடியாவிலும் யாரையும் விமர்சித்து, தவறாக பேட்டி கொடுத்தது இல்லை. பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் பந்தா இல்லாத அவரை போன்ற தயாரிப்பாளர்களை இனி பார்ப்பது அபூர்வம் என்கிறார்கள்.