இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
கடந்த 2022ல் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் நடித்து, இயக்கியுள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் பிரித்விராஜ் மற்றும் அவரது நண்பரான தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லிஸ்டின் ஸ்டீபனுக்கும் படத்தின் முதல் இரண்டு வார கலெக்ஷனில் ஏற்பட்டுள்ள பங்கு பிரிக்கும் பிரச்னை காரணமாக இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. வினியோகஸ்தர் லிஸ்டின் ஸ்டீபன் இரண்டு வாரங்களுக்கு வசூலில் 55 சதவீதம் பங்கு தர வேண்டும் என கேட்கிறார்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்களோ முதல் வாரம் மட்டுமே 55 சதவீத பங்கு தர ஒப்புக் கொண்டுள்ளனர். லிஸ்டின் ஸ்டீபன் இந்த விஷயத்தில் இறங்கி வர பிடிவாதம் காட்டுவதால், இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது இருந்தாலும் படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் இருப்பதால் அதற்குள் இருதரப்பிலும் பேசி பிரச்னையை சரி செய்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது.