ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

காஷ்மீரின், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஆந்திராவை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். இவரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளனர்.
தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் அவரின் வேடத்தில் தெலுங்கு பிக்பாஸில் பங்கேற்று பிரபலமான கவுதம் கிருஷ்ணா நடிக்கிறார். விஷான் பிலிம் பேக்ட்ரி சார்பில் சுரேஷ் பாபு தயாரிக்கிறார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட எண்ணி உள்ளனர். இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. முரளி நாயக்கின் குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி பெற்று இந்த படத்தை எடுக்கின்றனர்.
ஹீரோ கவுதம் கிருஷ்ணா கூறுகையில், ‛‛இது படம் அல்ல, நிஜ ஹீரோவின் கதை. இதுவரை தெலுங்கு சினிமாவில் தனி ராணுவ வீரர் தொடர்பான படம் வெளியாகவில்லை. இதுதான் முதல்முறை. முரளி நாயக்கின் கதை இந்த உலகத்திற்கு சொல்லப்பட வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் இதில் முக்கிய இடம் பெறுகிறது. அந்த போரில் பங்கேற்று உயிர்நீத்த அவரை பற்றி இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியொரு வலுவான கதையில் நான் நடிப்பதை அதிர்ஷ்டமாக உணருகிறேன்'' என்றார்.




