என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பொதுவாக இளையராஜா பிற இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்ப மாட்டார். அபூர்வமாக இது நடந்திருக்கிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த 'மெல்ல திறந்தது கதவு' என்ற படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து இசை அமைத்திருந்தார். மோகன், அமலா, ராதா நடித்த இந்த படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்திற்கு முன்னதாக அதாவது 1985ம் ஆண்டு ராமராஜன் இயக்கத்தில் உருவான 'ஹலோ யார் பேசுறது' என்ற படத்திற்கு கங்கை அமரனுடன் இணைந்து இசை அமைத்தார் இளையராஜா. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. இந்த படத்தில் சுரேஷ், ஜீவிதா, கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தார்கள்.
 
           
             
           
             
           
             
           
            