கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

இப்போதெல்லாம் இந்திய நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் நடிப்பது சர்வசாதரணமாகி விட்டது. ஆனால் 1930களில் இதெல்லாம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. காரணம் அன்று ஹாலிவுட் படங்களை முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமே பார்த்தார்கள். பொது மக்கள் பார்வைக்கு வரவில்லை.
இப்படியான நிலையில் 1937ம் ஆண்டு எலிபண்ட் பாய் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் சாபு தஸ்தகீர். கர்நாடக மாநில் மைசூரை சேர்ந்தவர். சிறுவனாக இருந்தபோது யானை பாகனாக இருந்ததால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்த படத்தின் மூலம் புகழ்பெற்ற அவர், அடுத்து 'தி ட்ரம்' (1938), 'தி தீப் ஆப் பாக்தாத்' (1940), 'ஜங்கிள் புக்' (1942), 'அரேபியன் நைட்ஸ்' (1942) உள்பட பல படங்களில் நடித்தார். 1948-ம் ஆண்டு 'சாங் ஆப் இந்தியா' என்ற படத்தில் நடித்த மர்லின் கூப்பர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அந்நாட்டின் விமானப்படையில் சேர்ந்து பணியாற்றினார். அவருடைய வீரம் மற்றும் துணிச்சலுக்காக விருதையும் பெற்றுள்ளார். 1963ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
பலரும் அறியாத இவருடைய வாழ்க்கை தற்போது சினிமாவாகிறது. அல்மைட்டி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரிக்கிறது. இதற்கான உரிமத்தை சாபு தஸ்தகீரின் குடும்பத்திடம் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது.




