'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

சென்னையில் நடந்த 'வள்ளுவன்' பட விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இன்றைய சினிமா நிலவரம், தயாரிப்பார்கள் நிலை குறித்து பல கருத்துகளை பேசினார். அவர் பேசுகையில் ''கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு 2 ஆயிரத்து 500 புதிய தயாரிப்பாளர்கள் வந்து இருக்கிறார்கள். இது நல்ல விஷயம். ஆனால், அதில் 2 ஆயிரத்து 100 தயாரிப்பாளர்கள் ஒரு படத்துடன் காணாமல் போய்விட்டார்கள்.
மீதமுள்ள 400 பேர் மட்டுமே அடுத்த படம், அடுத்த சில படங்களை தயாரித்தார்கள். காரணம், சினிமாவில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கிறது. சினிமா நிலவரம் அப்படி இருக்கிறது. நானும் தயாரிப்பாளராக இருந்தேன், பிரபல இயக்குனராக இருந்தேன். 1991 தொடங்கி பல ஆண்டுகள் நான் தயாரிப்பாளராக இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் 16 கார்கள் இருந்தன. தென்னிந்தியாவில் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணினேன். சில ஆண்டுகள் கழித்து அந்த கார்கள் இருந்தன. ஆனால், அதற்கு டீசல் போட என்னிடம் பணம் இல்லை. சினிமா மாறிக்கொண்டே இருக்கும். அப்போது நான் ஆட்டோவில், பஸ்சில் போக பழகிக்கொண்டேன்'' என்றார்.