என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
குபேரா படத்தை அடுத்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‛தி கேர்ள் பிரண்ட்' என்ற படம் திரைக்கு வரவுள்ளது. விரைவில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறார் ராஷ்மிகா. இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் குறித்து நான் சொன்ன கருத்துக்களை ஊடகங்கள் தவறான கோணத்தில் சித்தரித்து அதை சர்ச்சையாக்கி விட்டதாக'' தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
குறிப்பாக நான் சொல்லும் சாதாரண விஷயங்களை கூட தவறாக புரிந்து கொள்வதோடு, அதை சர்ச்சையாக்க வேண்டும் என்று திட்டமிட்டே வார்த்தைளை திரித்து வெளியிடுகிறார்கள். நான் சொல்லும் கருத்துக்களை விமர்சன கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு, சோசியல் மீடியாவிலும் டிரோல் செய்கிறார்கள்.
என் கருத்துக்கள் மட்டுமின்றி அதில் அவர்களது சொந்த கருத்துகளையும் நான் சொன்னது போன்று சேர்த்து விவாதங்களுக்கு உட்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ள ராஷ்மிகா, இனிவரும் காலங்களில் ஊடங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட போகிறேன். விமர்சனங்களை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் வெளியிட மாட்டேன் என்று முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.