Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள்

15 ஜூலை, 2025 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Saroja-Devi-passes-away---Actors-and-actresses-who-did-not-express-their-condolences-as-usual

தமிழ்த் திரையுலகத்தில் மறக்க முடியாத கதாநாயகிகளில் ஒருவர் சரோஜா தேவி. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தவர். வயது மூப்பு காரணமாக நேற்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவு குறித்து ரசிகர்கள் பலர் அவர்களது சமூக வலைத்தளங்களில் இரங்கலையும், அவர்கள் ரசித்த சரோஜா தேவி நடித்த படங்கள் பற்றியும் எழுதியிருந்தனர்.

ஆனால், தமிழ் சினிமா உலகில் வழக்கம் போல சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். வழக்கம் போல பலர் எந்தவிதமான இரங்கலையும் தெரிவிக்கவில்லை. திரையுலகில் தங்களது சக மூத்த நடிகை ஒருவர் இறந்தது குறித்து அவர்கள் எதுவுமே இரங்கல் தெரிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பலரும் ஒரு வரி இரங்கல் கூட அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இத்தனைக்கும் 'ஒன்ஸ்மோர்' படத்தில் சரோஜாதேவியுடன் நடித்திருக்கிறார் விஜய்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் பிரபு, சத்யராஜ், டி ராஜேந்தர், சிவக்குமார், சரத்குமார், குஷ்பு, சிம்ரன், கவுதமி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் மட்டுமே இரங்கல் தெரிவித்திருந்தனர். நேற்று தன்னுடைய பிறந்தநாளாக இருந்தாலும் அதற்கான கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டு, இரங்கலும் பதிவிட்டிருந்தார் சரத்குமார்.

இது போன்று முக்கியமான நடிகர்கள், நடிகைகள் மறைவுக்கு பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவிக்காமல் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு சினிமா ரசிகருக்கு இருக்கும் துயரம் அவர்கள் துறை சார்ந்தவர்களுக்கு வராதது ஆச்சரியம்தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல்'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி ... 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !