சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' எனும் படத்தை தனது 25வது படமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவரின் 24வது படத்தை குறுகிய காலக்கட்டத்தில் நடிக்கவுள்ளார். குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் தான் இதை இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை வருகின்ற ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறாராம். ஆனால் அவரின் கால்ஷீட் இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் நாட்களில் ஒத்துவரவில்லை. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்தை தொடங்கலாமா என படக்குழுவினர் யோசித்து வருகின்றனராம்.