கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
1950களில் நடந்த கல்லக்குடி போராட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று நடந்த போராட்டம். இந்த போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது அவரது அரசியல் வாழ்வில் பெரிய திருப்புமுனை.
ஆனால், கல்லக்குடி போராட்டத்திற்கு எம்ஜிஆர் நாடகத்தில் நடித்து நிதி திரட்டிக் கொடுத்தது பலரும் அறியாத ஒன்று. அந்த நாடகத்தின் பெயர் 'இடிந்த கோவில்'. எம்ஜிஆர் நாடக மன்றத்தினர் நடத்திய இந்தத நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
சினிமாவில் ஹீரோவான பிறகு எம்ஜிஆர் நடித்த முதல் நாடகம் இது. 1953ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த இந்த நாடகத்தில் எம்ஜிஆருடன் அவரது அண்ணன் சக்கரபாணி, கே.ஏ.தங்கவேல், முஸ்தபா, நாராயண பிள்ளை, திருப்பதி சாமி, குண்டுமணி உள்பட பலர் நடித்தனர்.
நாடகத்தின் கதையை விஸ்வம் எழுதியிருந்தார். ரவீந்திரன் வசனம் எழுதி இருந்தார். நாடகம் பார்க்க அதிகபட்ச கட்டணம் 5 ரூபாய், குறைந்த கட்டணம் 8 அணா. இரண்டு நாள் நடந்த இந்த நாடகத்தின் வசூலை போராட்ட குழுவிற்கு எம்ஜிஆர் வழங்கினார்.