'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
1950களில் நடந்த கல்லக்குடி போராட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று நடந்த போராட்டம். இந்த போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது அவரது அரசியல் வாழ்வில் பெரிய திருப்புமுனை.
ஆனால், கல்லக்குடி போராட்டத்திற்கு எம்ஜிஆர் நாடகத்தில் நடித்து நிதி திரட்டிக் கொடுத்தது பலரும் அறியாத ஒன்று. அந்த நாடகத்தின் பெயர் 'இடிந்த கோவில்'. எம்ஜிஆர் நாடக மன்றத்தினர் நடத்திய இந்தத நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
சினிமாவில் ஹீரோவான பிறகு எம்ஜிஆர் நடித்த முதல் நாடகம் இது. 1953ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த இந்த நாடகத்தில் எம்ஜிஆருடன் அவரது அண்ணன் சக்கரபாணி, கே.ஏ.தங்கவேல், முஸ்தபா, நாராயண பிள்ளை, திருப்பதி சாமி, குண்டுமணி உள்பட பலர் நடித்தனர்.
நாடகத்தின் கதையை விஸ்வம் எழுதியிருந்தார். ரவீந்திரன் வசனம் எழுதி இருந்தார். நாடகம் பார்க்க அதிகபட்ச கட்டணம் 5 ரூபாய், குறைந்த கட்டணம் 8 அணா. இரண்டு நாள் நடந்த இந்த நாடகத்தின் வசூலை போராட்ட குழுவிற்கு எம்ஜிஆர் வழங்கினார்.