விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? |
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே படம் துவங்கி தற்போது வரை மிக அதிக அளவிலான படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து, தனது இசைக்கு, பாடல்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டாரத்தையே பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல பரபரப்பாக அவர் இயங்கவில்லை என்றாலும் செலெக்ட்டிவ்வான படங்களுக்கு தற்போது அவர் இசையமைக்க வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கனடாவுக்கு சென்றிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அங்கே டோரண்டோவில் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நடத்தினார். இதனை தொடர்ந்து கனடா அரசு அவருக்கு நினைவு பரிசு வழங்கி அவரை கவுரவித்து உள்ளது. இது குறித்த தகவலையும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
கனடா அரசு வழங்கிய அந்த சான்றிதழில், “உங்களுடைய மறக்க முடியாத பாடல்களாலும் புதுவிதமான இசை பாணியினாலும் நீங்கள் தமிழ் இசையை உலக அளவில் சென்றடைய செய்திருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, பல புதிய இளம் தலைமுறை கலைஞர்கள் உருவாவதற்கும் தூண்டுதலாக இருந்திருக்கிறீர்கள். டோரண்டோவில் உங்களது வருகை என்பது இசையை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பெருமையான நிகழ்வும் கூட. நீங்கள் இந்த கலையின் மூலமாக ரசிகர்களுக்கு கொண்டுவந்து தந்த மகிழ்ச்சி, உணர்வு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.