ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சமீபத்தில் வெளியான படம் பரமசிவன் பாத்திமா. இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கி இருந்தார். படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்திருந்தார். தற்போது 'ஆட்டி' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். 'மேதகு' படத்தை இயக்கிய தி.கிட்டு இயக்கி உள்ளார். இசக்கி கார்வண்ணனே படத்தை தயாரித்துள்ளார்.
அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சவுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீசன் இசை அமைத்துள்ளார். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது "மனித குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்திய கதையாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின பெண் குல தெய்வங்கள் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது.
ஊட்டி, குன்னூர் பகுதியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் மற்றும் காரைக்குடியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் வெளியாகும் விதமாக தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன" என்றார்.