ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியுள்ள ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) என்கிற படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் அந்த படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற ஜானகி என்கிற பெயரை நீக்குமாறு வாய்மொழியாக அறிவுறுத்தினார்கள். ஆனால் படக்குழுவினர் அதை மறுத்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பினார்கள். அங்கேயும் இதே காரணம் சொல்லப்பட்டு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
சென்சாரின் இந்த செயல் மலையாள திரை உலகில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல மலையாள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சென்சாருக்கு எதிராக தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். மேலும் இன்று (ஜூன் 30) திருவனந்தபுரத்தில் உள்ள சென்சார் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர். அதன்படி மலையாள தொழிலாளர் சம்மேளனம், மலையாளத் திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் திரைப்படங்களில் கருத்து சுதந்திரத்தை கத்திரிக்க கூடாதென்று ஆவேசமாக குரல் எழுப்பிய அவர்கள் சென்சாரின் இந்த அராஜக செயலை கண்டிக்கும் விதமாக தாங்கள் கையில் கொண்டு வந்திருந்த கத்திரிக்கோல்களை அங்கிருந்த ஒரு குப்பை தொட்டியில் போட்டு நூதனமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் அங்கிருந்து கொஞ்ச தூரம் ஒரு பேரணியையும் அவர்கள் நடத்தினார். இவர்களது இந்த எதிர்ப்பால் சுரேஷ் கோபியின் படத்திற்கு சரியான தீர்வு கிடைக்குமா, இல்லை மீண்டும் ட்ரிபியூனலுக்கு மறு தணிக்கைக்காக இந்த படம் அனுப்ப வேண்டிய சூழல் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.