இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
அந்த காலத்தில் காமெடி ஜோடியாக வலம் வந்தவர்கள் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும். பின்னாளில் இருவரும் திருமணம் செய்து கொண்டு நிஜத்திலும் ஜோடியானார்கள். இவர்கள் நடிக்காத படமே இல்லை என்கிற அளவிற்கு இந்த ஜோடி கொடி கட்டிப்பறந்தது. இவர்களின் காமெடி கதைகள் தனியாக படமாக்கப்பட்டு படத்துடன் இணைக்கப்பட்டு வெளிவந்த காலமும் உண்டு.
இப்படியான நிலையில் இவர்களுக்கு போட்டியாக இன்னொரு காமெடி ஜோடியும் வலம் வந்தது. இவர்கள் அளவிற்கு வெற்றி பெறவாவிட்டாலும் இந்த ஜோடியும் மக்களை சிரிக்க வைத்தது. அது காளி என்.ரத்னம் - சி.டி.ராஜகாந்தம் ஜோடி.
மேடைகளில் காளி வேடமிட்டு புகழ்பெற்ற ரத்னம், சினிமாவில் காளி.என்.ரத்னம் என்ற பெயரில் நடித்தார். ராஜகாந்தம் கோவை எஸ்.ஆர்.ஜானகி நாடக குழுவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். 1939ம் ஆண்டில் வெளியான மாடர்ன் தியேட்டர்சின் 'மாணிக்கவாசகர்' படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவருடன் நடித்த காளி என்.ரத்னம் பின்னர் ராஜாகாந்தத்தை தன் குழுவில் இணைத்துக் கொண்டார்.
இருவரும் இணைந்து நடித்த உத்தம புத்திரன் (1940) படம் இந்த ஜோடிக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து ஊர்வசி, சூர்யபுத்திரி, பக்த கௌரி, மாயாஜோதி, தயாளன், சபாபதி, சிவலிங்க சாட்சி, மனோன்மணி, சதி சுகன்யா, கங்காவதார், அல்லி விஜயம், பஞ்சாமிருதம், பிருதிவிராஜ், காரைக்கால் அம்மையார், திவான் பகதூர் மற்றும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ஒரு கட்டத்தில் காளி.என்.ரத்தினத்திடம் இருந்து பிரிந்து கே.சாரங்கபாணியுடன் நடிக்க ஆரம்பித்தார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் காமெடி நாடக குழுவை ஆரம்பித்து நடத்தினார்.
2003ம் ஆண்டில் ஒளிப்பரப்பான 'மர்மதேசம்' தொடரில் சுருட்டு புகைக்கும் சூனியக்கார கிழவியாக நடித்து அடுத்து தலைமுறைக்கும் அறிமுகமானார். தனது 86வது வயதில் சென்னையில் காலமானார்.