என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

‛பேரன்பு' படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் 'பறந்து போ'. இந்த படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாகவும், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரேயோன், அஞ்சலி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
இதில் மலையாள நடிகை கிரேஸ்ஆண்டனி கால்ஷீட்டுக்காக 4 மாதங்கள் காத்திருந்திருக்கிறார் ராம். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ‛‛கனவுகளை அடைவதற்காகப் போராடும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதைதான் இந்தப் படம். தங்களால் அடைந்துவிட முடியாத அனைத்தையும் தங்கள் குழந்தைகளாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் அப்பா அம்மாக்களின் கதைதான் இது.
அவர்கள் தங்கள் குழந்தைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு எது தேவை என குழந்தைகளிடம் அவர்கள் கேட்பதில்லை. குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்குமான இடைவெளி கூடிக்கொண்டே போகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்கும் நடக்கிற உரையாடலே படத்தின் கதை.
கிரேஸ் ஆண்டனிக்கு தமிழில் இது முதல் படம். 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த 'அப்பன்' படம் பார்த்தேன். அதில் 15 நிமிடமே ஒரு கேரக்டரில் வந்து ரியாக்ஷன்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். இவர்தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அவருக்காக நான்கு மாதம் வரை காத்திருந்து அவரைக் கொண்டு வந்தேன். கிரேஸ் கொஞ்சம் முயற்சி செய்தால் ஊர்வசி இடத்திற்கு வந்து உட்கார்ந்துவிடுவார். தமிழில் அவருக்கு ஒரு கதவு திறக்கும் என்பது என் கணிப்பு'' என்கிறார் ராம்.