'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

சினிமா தனக்கான வெற்றிடத்தை தானே நிரப்பிக் கொள்ளும் என்பார்கள். அந்த வகையில் தியாகராஜ பாகவதர் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு அவரது இடத்தை கன்னட நடிகர் ஹொன்னப்ப பாகவதர் பிடித்தார். அவர் நடிக்க இருந்த படங்களில் எல்லாம் நடித்தார்.
அதே போல என்.எஸ்.கிருஷ்ணன் அதே வழக்கில் சிறை சென்றபோது அவரது இடத்தை நிரப்பியவர் டி.எஸ்.துரைராஜ். என்.எஸ்.கிருஷ்ணன் அப்போது காமெடியில் தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தால் துரைராஜால் தனியாக வெற்றி பெறமுடியவில்லை. இதனால் என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அவர்களுக்கு சகோதரர், மைத்துனர், வேலைக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் போன்ற கேரக்டர்களில் நடித்தார். ஆனால் என்.எஸ்.கேவின் ஆதிக்கத்துக்கு முன்னால் அவரால் வெளிவர முடியவில்லை.
இந்த நிலையில் என்.எஸ்.கிருஷ்ணன் சிறைக்கு சென்றதால் அவர் நடிக்க இருந்த படங்களில் துரைராஜ் நடித்தார். சில படங்களில் டி.ஏ.மதுரம் ஜோடியாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் 'அண்ணி உங்களை என் அம்மாவாக பார்க்கிறேன். என்.எஸ்.கே இடத்தில் இருந்து என்னால் உங்களுடன் நடிக்க முடியவில்லை' என்று துரைராஜ் கூற அவரது உணர்வை மதித்து நடிப்பதை நிறுத்தினார் மதுரம்.
ஓரளவிற்கு என்.எஸ்.கே இடத்தை நிரப்பினார் துரைராஜ். ‛பிழைக்கும் வழி, போர்ட்டர் கந்தன்' உள்ளிட்ட சில காமெடி படங்களையும் இயக்கினார். 'பிழைக்கும் வழி' பெரிய வெற்றி பெற்று அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. ஆனால் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் துரைராஜ் குதிரை ரேஸில் இழந்தது தனி கதை.