பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான ஆடியோ | துாக்கம் இல்லாமல் தவிக்கும் ஸ்டார்கள் | பெரிய பட்ஜெட் படங்களை தவிர்க்கும் கமல்ஹாசன் | 'யாதும் அறியான்' ஆடியோ உரிமையை கைப்பற்றிய சரிகம | டிரண்டிங்: ரீல் வீடியோவால் சீரழியும் தம்பதிகளின் கதை | 'கூலி'க்காக ஆடிய டி.ராஜேந்தர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன் படம் | தமிழில் 'எப் 1': நாளை வெளிவருகிறது | பிளாஷ்பேக்: மார்க்கெட் இழந்ததால் வெளிவராத விஜயன் படம் | பிளாஷ்பேக்: சரஸ்வதி சபதம் உருவாக காரணமான 'கலாவதி' |
தேவராஜ் மோனிடம் உதவியாளராக இருந்தவர் வி.அழகப்பன் என்கிற வேதம்பட்டி அழகப்பன். 'அண்ணக்கிளி' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். பின்னாளில் இயக்குனரான அவர் முதன் முறையாக 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' என்ற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர், விஜயன் கதையின் நாயகனாக நடிக்க 'கண்ணிலே அன்பிருந்தால்' என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் ஆரம்பிக்கும்போது விஜயன் மார்க்கெட் உள்ள நடிகராக இருந்தார். ஆனால் படம் சற்று தாமதமாக முடிந்ததால்0 அதற்குள் விஜயன் மார்கெட்டை இழந்து விட்டார். இதனால் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. கடைசிவரை படமும் வெளிவரவில்லை.
இதனால் அழகப்பனுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. 5 வருடங்கள் கடுமையாக போராடி அதன் பிறகு 'ஆகாய தாமரைகள்' என்ற படத்தை இயக்கினார். சுரேஷ், ரேவதி நாயகன் நாயகியாக நடித்தனர். ஜெய் கணேஷ், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்தனர். ரேவதியும், சுரேசும் அப்போது இளம் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் அருமையான காதல் படமாக இந்த படம் அமைந்து பெரிய வெற்றி பெற்றது.
விஜயன் நடித்த 'கண்ணிலே அன்பிருந்தால்' படத்தை வெளியிட அழகப்பன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. தான் இயக்கிய படங்களிலேயே சிறந்த படம் என்று அதனை எப்போதும் குறிப்பிடுவார்.