அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
1966ம் ஆண்டு வெளியான 'சரஸ்வதி சபதம்' படம் ஏ.பி.நாகராஜனின் வெற்றி படங்களில் ஒன்று. சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா என பலர் நடித்திருந்தார்கள். கிராமங்களில் சொல்லப்படும் நாட்டார் வழி கதைதான் இது.
கல்வி கடவுள் சரஸ்வதி, செல்வத்தின் கடவுள் லட்சுமி, வீரத்தின் கடவுள் பார்வதி மூவருக்கும் யார் பெரியவர் என்ற சண்டை வரும். இதற்காக அவர்கள் பூமியில் மனிதர்களை தேர்ந்தெடுத்து தங்கள் சக்தியை வழங்குவார்கள், எந்த மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறானோ அந்த சக்தியை கொண்ட கடவுளே பெரியவர் என்ற போட்டி நடப்பதுதான் படத்தின் கதை.
1951ம் ஆண்டு வெளிவந்த 'கலாவதி' என்ற படத்தின் கதையும் இதுதான். கல்வி கடவுளான சரஸ்வதிக்கும் செல்வத்தின் கடவுளான லட்சுமிக்கும் போட்டி வரும், பூமியில் ஒரு விவசாயியை தேர்வு செய்து லட்சுமி அவனுக்கு தங்க கட்டிகளை கொடுப்பார், சரஸ்வதி கல்வியை கொடுப்பார். இறுதியில் வெற்றி பெற்றது தங்க கட்டியாக, கல்வியா என்பதுதான் படத்தின் கதை.
எல்.எஸ்.ராமச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் டி.எஸ்.துரைராஜ், டி.ஏ.ஜெயலட்சுமி நடித்திருந்தனர். எம்.எஸ்.ஞானமணி தயாரித்திருந்தார். வின்ஸ்டர் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்தது. கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஸ்டார் ஸ்டூடியோவில் முழு படமும் தயாரானது.