ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவருக்கு முதல் படமாக வெளியான இந்தப்படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் கயாடு லோஹர். அதற்கு சமகாலத்திலேயே அதர்வாவுடன் ஜோடியாக அவர் நடித்து வந்த 'இதயம் முரளி' திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. 'டிராகன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கயாடு லோஹருக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'பள்ளிச்சட்டம்பி' என்கிற படத்தில் நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாடு லோஹர், ஏற்கனவே மலையாளத்தில் '19ம் நூற்றாண்டு', 'ஒரு ஜாதி ஜாதகம்' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் போலி என்கவுண்டர் கதை அம்சத்துடன் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய 'ஜன கன மன' படத்தை இயக்கிய இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தான் பள்ளிச்சட்டம்பி படத்தை இயக்குகிறார்.