பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தி கோட்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இழுபறியில் இருந்தது. சிவகார்த்திகேயனை வைத்து இவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அந்த படம் தள்ளிபோய்க் கொண்டே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் கால்ஷீட்டை சிவகார்த்திகேயன் ஒதுக்கி உள்ளாராம். இதனால் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட் பிரபு இலங்கையில் மேற்கொண்டு வந்தார்.
இந்த படமும் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் கதையில் தான் உருவாகிறது. படத்தில் இரு நாயகிகள் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன், கயாடு லோகர் ஆகியோர் நடிக்க போகிறார்கள். இவர்களில் கல்யாணி ஏற்கனவே வெங்கட்பிரபுவின் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயன் உடன் ஹீரோ படங்களில் நடித்தவர்.
கயாடு முதன்முறையாக வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் உடன் பணியாற்ற உள்ளார். டிராகன் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கயாடு லோகருக்கு தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது இதயம் முரளி, சிம்புவின் 49வது படம் ஆகிய படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.