ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதுதவிர ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‛மதராஸி' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவரின் 24வது படத்தை குறுகிய கால கட்டத்தில் நடிக்கவுள்ளார். இதை குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க போவதாகவும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்பா, மகன் உறவை உணர்த்தும் படமாக உருவாகிறது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு அதற்கான முன் தயாரிப்பு பணிகளை விரைவுப்படுத்தி உள்ளனர்.