திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதுதவிர ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‛மதராஸி' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவரின் 24வது படத்தை குறுகிய கால கட்டத்தில் நடிக்கவுள்ளார். இதை குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க போவதாகவும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்பா, மகன் உறவை உணர்த்தும் படமாக உருவாகிறது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு அதற்கான முன் தயாரிப்பு பணிகளை விரைவுப்படுத்தி உள்ளனர்.