ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
கமல்ஹாசனும், மணிரத்னமும் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த படம் 'தக்லைப்'. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தை மெகா ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுடன், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்களை நடிக்க வைத்தார் மணிரத்னம். என்றாலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தக்லைப் படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக முதல் நாளில் இருந்தே அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாக தொடங்கின.
அதனால் இந்திய அளவில் முதல் நாளில் 17 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7.15 கோடியும், மூன்றாவது நாளில் 7.75 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடியும் வசூலித்த நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் 3.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இது இந்தியன்- 2 படத்தை விட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்தமான வசூல் காரணமாகவே இதுவரை தக்லைப் படக்குழு அப்படத்தின் வசூல் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்கள்.