'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக ஜொலித்தவர் மோகன். பொறியியல் படித்த அவர் ஆரம்பத்தில் அந்த வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். என்றாலும் நாடகத்தின் மீதுதான் அவருக்கு ஈர்ப்பு. மற்றவர்களின் நாடகத்தில் நடித்தவர், பின்னர் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இது பெரும் வெற்றி பெற்றது. இந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் சினிமாவுக்கென்று ஒரு கதை எழுதுமாறு சொன்னார். அதுதான் 'பொய்கால் குதிரை'. நாடகமும், படமும் ஹிட்டானதால் 'யாருப்பா இந்த மோகன்' என்று கேட்க அப்போது நிறைய மோகன்கள் இருந்ததால் 'கிரேஸி மோகன்' என்றார்கள். அதுவே அவரது பெயராக மாறியது.
அவரது நாடகங்களில் அவரது தம்பி பாலாஜி நடித்தார். நாடகத்தில் அவரது பெயர் மாது. கிரேஸி மோகன் இயக்கிய எல்லா நாடகத்தின் நாயகன் பெயரும் மாதுதான். அதுதான் பாலாஜி, 'மாது பாலாஜி' ஆனார். பின்னர் கமல்ஹாசன் அழைத்து 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு வசனம் எழுத சொன்னார். அவர் எழுதிய வசனங்கள் பெரிய ஹிட். கமல் அவரை தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.
கே.பாலச்சந்தர், கமல் படங்கள் அல்லாது வேறு பல படங்களுக்கும் வசனம் எழுதினார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் நாடகத்தையும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். கருணாநிதி, இளங்கோவன், ஆரூர்தாஸ், ஸ்ரீதர், பாலமுருகன், பாலசந்தர், பாக்யராஜ், சுஜாதா, ஏ.எல்.நாராயணன், பாலகுமாரன் வரிசையில் கிரேஸி மோகனுக்கும் இடம் உண்டு.
அண்மையில் நடந்த கிரேஸி மோகன் விழாவில் கமல் பேசியபோது குறிப்பிட்டார். 'எல்லோரும் செத்த பிறகு சொர்க்கத்துக்கு போக விரும்புவார்கள், ஆனால் மோகன் வாழும்போதே சொர்க்கத்தில் வாழ்ந்தவர்' என்றார். இன்று கிரேஸி மோகனின் 6வது நினைவு நாள்.