தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
கடந்த சில வாரங்களாக சினிமா பாடல் வெளியீட்டு விழா, சிறப்பு காட்சிகளில் அரசியல்வாதிகள் பேச்சுகளை அதிகம் கேட்க முடிகிறது. குறிப்பாக, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்கர்பச்சான் மகன் நடித்த பேரன்பும் பெருங்கோபமும், விமல் நடித்த பரமசிவன் பாத்திமா போன்ற பாடல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டார். சில படங்களின் சிறப்பு காட்சிகளை பார்த்து பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் புதுமுகங்கள் நடித்த இரவுப் பறவை மற்றும் குயிலி பாடல்கள் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டார். ஷீலா நடித்த வேம்பு, தங்கர்பச்சான் மகன் நடித்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்தார்.
பாஜ மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், நாகேஷ் பேரன் பிஜேஷ் நடித்த வானரன் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார். அரசியல்வாதிகளை சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைத்து அவர்கள் கருத்தை மீடியாவில் வரவழைப்பது கோலிவுட்டில் இப்போது புது டிரென்ட் ஆக மாறி வருகிறது.