ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
என்.டி.ராமராவ் என்றாலே அவர் நடித்த புராண படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் பல படங்களை இயக்கி உள்ளார், பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
'சீத்தாராம கல்யாணம்' என்ற படத்தை முதன் முறையாக 1961ம் ஆண்டு இயக்கினார். அதற்பிறகு 20 படங்கள் வரை இயக்கினார். அவைகள் பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகள். 1966ம் ஆண்டு 'ஸ்ரீகிருஷ்ண பாண்டேவியாம்' என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். அதன்பிறகு 19 படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 1967ம் ஆண்டு 'உம்மடி குடும்பம்' என்ற படத்திற்கு கதை எழுதினார். அதை தொடர்ந்து 13 படங்களுக்கு கதை எழுதினார். தமிழில் 'கண்ணன் கருணை' என்ற படத்திற்கும் சிவாஜி நடித்த 'சரித்திர நாயகன்' படத்திற்கு கதை எழுதினார், அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார்.