ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
திருவிதாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் நடனம் மட்டுமே ஆடிவந்தனர் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். இவர்கள் நடனத்திற்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்ததால் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் இவர்களது நாட்டியம் படங்களில் இடம்பெற்றது. திருவிதாங்கூர் சகோதரிகளின் நாட்டியம் இடம்பெற்ற படம் என்று விளம்பரமும் செய்யப்பட்டது.
சகோதரிகள் மூன்று பேருக்குமே படத்தில் நடிக்கும் ஆசை இருந்தாலும் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையவில்லை; தொடர்ந்து நடனம் ஆடவே அழைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் 1950ம் ஆண்டு வெளிவந்த 'ஏழை படும் பாடு' படத்தில் பத்மினியும் ராகினியும் ஹீரோயின் ஆனார்கள். லலிதா - அஞ்சலா என்ற கேரக்டரிலும், பத்மினி - லட்சுமி என்ற கேரக்டரிலும் நடித்தனர். வி நாகையா, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். பாலையா, வி. கோபாலகிருஷ்ணன், டி.எஸ். துரைராஜ் மற்றும் 'லக்ஸ் சோப் பியூட்டி' குமாரி என். ராஜம். ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார்.
திருந்தி வாழ நினைக்கும் ஒரு திருடனுக்கும் கொடூர போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான கதை. ஜாபர்ட் என்ற அந்த போலீஸ் கேரக்டரில் சீதாராமன் நடித்திருந்தார். அவரது நெகட்டிவ் கேரக்டர் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் பின்னர் அவர் ஜாபர்ட் சீதாராமன் என்று அழைக்கப்பட்டார்.