நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான சுந்தர்.சிக்கு இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிவி்ட்டது. திருமண வாழ்க்கையில் 25 ஆண்டை எட்டியிருக்கிறார். 'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' என வரிசையாக 3 வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். இப்போது தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2'வை இயக்கி வருகிறார். அவர் மூத்த மகள் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இளைய மகள் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆகிவிட்டார். இதனால், அவருடைய நண்பர்கள், நெருக்கமான சினிமாகாரர்கள் 'எப்போ பார்ட்டி வைக்கப்போறீங்க. இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. எங்கே வரணும்' என்று நச்சரிக்கிறார்களாம். அவரோ, தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆகிறாராம்.