கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான சுந்தர்.சிக்கு இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிவி்ட்டது. திருமண வாழ்க்கையில் 25 ஆண்டை எட்டியிருக்கிறார். 'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' என வரிசையாக 3 வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். இப்போது தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2'வை இயக்கி வருகிறார். அவர் மூத்த மகள் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இளைய மகள் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆகிவிட்டார். இதனால், அவருடைய நண்பர்கள், நெருக்கமான சினிமாகாரர்கள் 'எப்போ பார்ட்டி வைக்கப்போறீங்க. இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. எங்கே வரணும்' என்று நச்சரிக்கிறார்களாம். அவரோ, தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆகிறாராம்.