முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு | இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் |
'ரெட்டைச்சுழி' படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்த ஆரி அர்ஜூனா பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆரி நடித்து முடித்துள்ள அலேகா, பகவான், டிஎன் 43, மண் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கிறது. சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் விஜய் மில்டன் தெலுங்கு, தமிழில் இயக்கும் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். 'ரப் நோட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
ஆரி போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது “ஆரி பார்ப்பதற்கு அமைதியாக தோன்றினாலும், உள்ளுக்குள் நெருப்பு போன்றவர். அந்த அமைதி தீ இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது வெறும் சாதாரண காவலர் வேடமல்ல , உணர்ச்சிகளால் நிரம்பிய, பன்முகத்தன்மை கொண்ட நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதற்கேற்ப ஆரி சரியான தேர்வாக இருந்தார்” என்றார்.