நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கூலி பட மேடையில்தான் ரஜினிகாாந்த் அடுத்து பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். கூலி பாடல் வெளியீட்டு விழா தள்ளிப்போகிறது. ஆனாலும் அடுத்த வாரம் ஒரு மேடையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினி பேசப் போகிறார். அது, மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்ற வெற்றி விழா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் மட்டுமல்ல, இயக்குனர் ஷங்கரும் பேசப்போகிறார்.
ஏற்கனவே, வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் இருக்கிறார் ஷங்கர். சூர்யா, சில இந்தி நடிகர்களிடம் பேசியநிலையில் எதுவும் நடக்கவில்லை. இப்போது இருவரும் நாவல் சம்பந்தப்பட்ட விழாவில் ஒன்றாக கலந்து கொள்வதால் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரோ அல்லது அவரே ஹீரோவா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. அடுத்தவாரம் விழா மேடையில் இதற்கான விடை கிடைக்கலாம்.