மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் | பிரேமலு நடிகருக்கு காய்ச்சல் : படப்பிடிப்பை ரத்து செய்த மோகன்லால் | இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா | ஒளிப்பதிவாளர் விரல் துண்டானது ஆனாலும், மறுநாளே வந்தார்: ஏ.ஆர்.முருகதாஸ் | ‛ஆட்டி' பெயர் சொல்லும் படமாக இருக்கும் : அபி | நடிகர் சங்க புதுகட்டடம் : விஜயகாந்த் பெயர் சூட்டப்படுமா | தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் 'காந்தா' ? | சிறிய படங்களுடன் விநாயக சதுர்த்தி ரிலீஸ் | ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் ? |
கூலி பட மேடையில்தான் ரஜினிகாாந்த் அடுத்து பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். கூலி பாடல் வெளியீட்டு விழா தள்ளிப்போகிறது. ஆனாலும் அடுத்த வாரம் ஒரு மேடையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினி பேசப் போகிறார். அது, மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்ற வெற்றி விழா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் மட்டுமல்ல, இயக்குனர் ஷங்கரும் பேசப்போகிறார்.
ஏற்கனவே, வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் இருக்கிறார் ஷங்கர். சூர்யா, சில இந்தி நடிகர்களிடம் பேசியநிலையில் எதுவும் நடக்கவில்லை. இப்போது இருவரும் நாவல் சம்பந்தப்பட்ட விழாவில் ஒன்றாக கலந்து கொள்வதால் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரோ அல்லது அவரே ஹீரோவா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. அடுத்தவாரம் விழா மேடையில் இதற்கான விடை கிடைக்கலாம்.