ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷாலை வைத்து வீரமே வாகை சூடும் படத்தை இயக்கியவர் தூ.பா. சரவணன். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஆதியை வைத்து புதிய படம் ஒன்றை இவர் உருவாக்கி வருகிறார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இதற்கு 'டிஸ்கோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தை பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்க மிஷ்கின் அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அனேகமாக படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.