22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கனிகா, மல்லிகா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மலரும் நினைவுகளை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஆட்டோகிராப்' படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்ய உள்ளனர். இதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய டிரைலரையும் வெளியிட்டிருந்தனர்.
படம் 2 மணி நேரம் 50 நிமிடம் கொண்டது. தற்போது மறு வெளியீட்டிற்காக படத்தின் 20 நிமிடக் காட்சி குறைக்கப்பட்டுள்ளது. அதோடு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒலியில் மாற்றம் செய்து, ரீ-வொர்க் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேரன் கூறும்போது "இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி 'ஆட்டோகிராப்' தயார் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு தூரம் சிரமத்தை பார்க்காமல் உழைப்பதற்கு காரணம், இன்றைக்கு இருக்கிற பார்வையாளர்கள் முட்டாள் இல்லை. அவர்கள் புத்திசாலி. அந்த ரசிகனை ஏமாற்றினால், அவனுக்குப் பிடிக்காது. எனவே அவனுக்கான பொறுப்போடு நாமும் படத்தை கொடுக்க வேண்டும்" என்றார்.