சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

சேரன் இயக்கி நடிக்க பரத்வாஜ் இசையமைக்க, மற்றும் சினேகா, மல்லிகா, கோபிகா உள்ளிட்ட பலர் நடிக்க 2004ம் ஆண்டில் வெளியாகி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் 'ஆட்டோகிராப்'. அப்படத்தை அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேரன், சினேகா, சேரனின் முன்னாள் உதவி இயக்குனர்கள் இந்நாள் இயக்குனர்களான பாண்டிராஜ், ஜெகன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டவர்களும், படக்குழுவினர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சேரனின் முன்னாள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் சில தகவல்களைச் சொன்னார். 'ஆட்டோகிராப்' படத்தில் முதலில் நாயகனாக நடிக்க விஜய்யிடம்தான் கதையைச் சொன்னார்களாம். ஆனால், அப்போது ஆக்ஷன் ஹீரோவாக வளர ஆரம்பித்திருந்த விஜய்யிடம் யாரோ சிலர் 'ஆட்டோகிராப்' படத்தில் நடித்தால் அவரை மாற்றிவிடுவார்கள் என பயமுறுத்தி இருக்கிறார்கள். அதனால், அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார். பின்னர் படம் வெளியாகி அந்தப் படத்தைப் பார்த்து நடிக்க மறுத்தது குறித்து மிகவும் வருத்தப்பட்டாராம். அதற்கடுத்து விஜய் - சேரன் கூட்டணியில் ஒரு படத்திற்காக அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு கடைசியில் அந்தப் படம் ஆரம்பமாகாமலேயே போய்விட்டது என்ற சில தகவல்களைச் சொன்னார்.
இந்தக் கால ரசிகர்களும் ரசிப்பதற்காக 'ஆட்டோகிராப்' படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் குறைத்து, பின்னணி இசையிலும் சில மாற்றங்களைச் செய்து 4கே தரத்தில் நவ., 14ல் வெளியிட உள்ளார்கள்.