விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் |

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் குறைந்த காரணத்தினால் அல்லது பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க பலரும் முன் வராத காரணத்தால் சமீபகாலமாக பல பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனங்கள் தமிழில் படம் தயாரிக்கின்றன. 'வாரிசு, குட் பேட் அக்லி' என பல படங்கள் அப்படி தயாரிக்கப்பட்டவை. இப்போது பல தெலுங்கு இயக்குனர்கள், தமிழ் சினிமா ஹீரோக்களை இயக்குகிறார்கள்.
'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற தெலுங்கு படத்தை இயக்கிய விவேக், அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல். 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, சூர்யா நடிக்கும் 46வது படத்தை இயக்கப்போகிறார். தனுஷ் நடிக்கும் 'குபேரா'வை இயக்கி வருபவரும், தெலுங்கு திரையுலகை சேர்ந்த சேகர் கம்முலாதான். விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க உள்ளார். அதேபோல் தமிழ் சினிமா நடிகர்களான சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் வரலட்சுமி, கஸ்துாரி போன்ற பலரும் தெலுங்கில் பிசியாக இருக்கிறார்கள்.