நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் குறைந்த காரணத்தினால் அல்லது பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க பலரும் முன் வராத காரணத்தால் சமீபகாலமாக பல பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனங்கள் தமிழில் படம் தயாரிக்கின்றன. 'வாரிசு, குட் பேட் அக்லி' என பல படங்கள் அப்படி தயாரிக்கப்பட்டவை. இப்போது பல தெலுங்கு இயக்குனர்கள், தமிழ் சினிமா ஹீரோக்களை இயக்குகிறார்கள்.
'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற தெலுங்கு படத்தை இயக்கிய விவேக், அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல். 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, சூர்யா நடிக்கும் 46வது படத்தை இயக்கப்போகிறார். தனுஷ் நடிக்கும் 'குபேரா'வை இயக்கி வருபவரும், தெலுங்கு திரையுலகை சேர்ந்த சேகர் கம்முலாதான். விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க உள்ளார். அதேபோல் தமிழ் சினிமா நடிகர்களான சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் வரலட்சுமி, கஸ்துாரி போன்ற பலரும் தெலுங்கில் பிசியாக இருக்கிறார்கள்.