பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‛தக் லைப்' படம் ஜுன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். கமல் பேசுகையில், ‛‛தக் லைப் படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். மணிரத்னம் எடுக்க நினைத்த சினிமாவை இப்போது தான் இயக்குகிறார். அவர் அவரது ஸ்டைலில் இயக்கி உள்ளார். நான் என் ஸ்டைலில் நடித்துள்ளேன். நாயகன் படத்தின் சாயலே தெரியாத அளவுக்கு இந்த படத்தை எடுத்துள்ளோம். இது நாயகன் படத்தின் தொடர்ச்சி அல்ல என்பதை பல இடங்களில் கூறியுள்ளோம்.
அடுத்த தலைமுறை நடிகர்கள் என்னை பற்றி பேசுகிறார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெருமை. அவர்கள் இன்னும் மேலே உயரணும் என்பது தான் என் ஆசை. என்னை பார்த்து அவர்கள் கற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து நிறைய விஷயம் கற்கிறேன். ஏஐ கற்க தான் போனேன். ஆனால் அது நம்மள விட பெருசு. அதை முழுமையாக தெரியாமல் நான் பயன்படுத்த மாட்டேன். வாழ்வில் மரணத்தை தவிர்க்க முடியாது. இருப்பதற்குள் நாம் என்ன பண்ண முடியுமோ அதை செய்து விடணும்'' என்றார்
சிம்பு பேசுகையில், ‛‛பொதுவாக நாம் நம்முடைய காட்சி பற்றி தான் கவனம் செலுத்துவோம். ஆனால் கமல் அவருடையது மட்டுமின்றி எல்லோருடைய காட்சி, வசனங்களையும் உற்று கவனிப்பார். இதுமாதிரி அவரிடம் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன். இப்போது என்னை பார்ப்பவர்கள் முன்பை விட அமைதியான ஆளாக இருப்பதாக சொல்கிறார்கள். ஏன் என தெரியவில்லை. அந்த வயதில் அப்படி இருந்தேன். இந்த வயதில் இப்படி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கமல் அவராக இருந்தார். நான் நானாக இருந்தேன். என் திருமணம் நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும்'' என்றார்.