பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சினிமாவில் 30 ஆண்டுகளை தொடுவது, 30 ஆண்டுகளை தாண்டி இன்றும் வெற்றிகரமாக இருப்பது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்தவகையில் சினிமாவில் 30வது ஆண்டை தொட்டு இருக்கிறார் சுந்தர்.சி. அவர் இயக்கிய முதல் படமான 'முறைமாமன்' 1995ம் ஆண்டு வெளியானது. அதில் ஜெயராம், குஷ்பு நடித்து இருந்தனர்.
'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' படங்களின் வெற்றிக்குபின் இப்போது நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்திஅம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். சுந்தர்.சியின் கடைசி மூன்று படங்களுமே வர்த்தக ரீதியில் வெற்றி, தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படம். இப்போது இயக்கும் மூக்குத்திஅம்மன் 2, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் அம்மன், போலீஸ் ஆபீசர் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
30 ஆண்டை தொட்ட சுந்தர்.சிக்கு திரையுலகினர் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் தங்கள் 25வது திருமண நாளை கொண்டாடிய குஷ்புவும், 'உங்கள் சினிமா வெறும் காமெடி மட்டுமல்ல, தமிழ் சினிமாவை பண்படுத்தியுள்ளது' என்று சுந்தர்.சி நடித்த படங்களின் முக்கியமான காட்சிகளை வெளியிட்டு அவர் காதல் மனைவி குஷ்புவும் வாழ்த்தியுள்ளார்.