தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சமந்தா காதலில் விழாமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பாலிவுட் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு உடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி இருப்பதுடன் அதுகுறித்த சமந்தாவின் கமெண்டுகள் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இதையடுத்து ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, இன்ஸ்டாகிராமில் 'இந்த புகைப்படத்தை வைத்து என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என கோபமாக பதிவிட்டார்.
தற்போது மற்றொரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்குக் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புறம் ரசிகர்கள் 'இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடதீர்கள்' என்று சமந்தாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இன்னொரு புறம் 'உங்கள் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்' என்று ஷியாமலியையும் கேட் வருகிறார்கள்.