'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
பான் இந்தியா இயக்குனரான ராஜமவுலி படத்தைப் பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில், “அற்புதமான 'டூரிஸ்ட் பேமிலி' படத்தைப் பார்த்தேன். மனதைத் தொடும், விலா எலும்புகளை நோக வைக்கும் நகைச்சுவை நிறைந்த படம். ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் ரசிக்க வைத்தது. அபிஷன் ஜீவிந்த் எழுதிய சிறந்த எழுத்து மற்றும் இயக்கம். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்திற்கு நன்றி, தவறவிடாதீர்கள்,” எனப் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் என சொல்லப்படும் சிலர் பாராட்டுவதற்கு முன்பாகவே ராஜமவுலி பாராட்டியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிட வேண்டியது.
அவரது பாராட்டிற்கு 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன், “இன்னும் நம்ப முடியாமல் தவிக்கிறேன். அவருடைய படங்களை என் கண்களில் நட்சத்திரங்களுடன் பார்த்தேன். அந்த உலகங்களை உருவாக்கிய மனிதன் ஒரு நாள் என் பெயரைப் பேசுவார் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. சார், நீங்கள் இந்த பையனின் கனவை, வாழ்க்கையை பெரிதாக்கிவிட்டீர்கள்,” என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.