‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ராஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த ஆறு மாதங்களில், புஷ்பா 2 படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி, பின்னர் ஹிந்தியில் வெளியான சாவா படத்தின் டீசன்டான வெற்றி என தொடர் வெற்றிகளும் இன்னொரு பக்கம் சிக்கந்தர் படத்தின் மூலம் கிடைத்த தோல்வி என ஏற்ற இறக்கத்துடன் திரைப்பயணம் சீராக சென்று கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ள குபேரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் நடிப்பில் கடந்த இரண்டு வருடமாக தெலுங்கில் கேர்ள் பிரண்ட் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல பின்னணி பாடகி சின்மயியின் கணவரும் தெலுங்கு நடிகருமான ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்,
ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ராஷ்மிகாவே டப்பிங் பேசியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடமே வெளியான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் எதுவும் வெளியாகாததால் ராஷ்மிகாவின் ரசிகர்கள் பொறுமை இழந்து 'ரிலீஸ் த கேர்ள் பிரின்ட்' என்கிற ஹேஸ்டேக்கை எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் ஆக்க துவங்கினர்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக ராஷ்மிகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களை நாங்கள் காக்க வைத்திருக்கிறோம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுடைய ட்ரெண்டிங் உண்மையிலேயே மதிப்பு மிக்க ஒன்று. அதேசமயம் இந்த படத்தின் மிகச்சிறந்த அவுட்புட்டை கொடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் ராகுல் ரவீந்திரன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதுவரை வெளியான படங்களிலேயே இது கொஞ்சம் வித்தியாசமான அம்சம் கொண்ட படமாக இருக்கும் என என்னை உறுதியாக நம்பலாம்” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.